• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
Paperback

எனது ஆண்கள் (Enathu Aangal)

By நளினி ஜமீலா, மொழிபெயர்ப்பாளர்-ப. விமலா

எனது ஆண்கள் (Enathu Aangal)
Price$11.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ of every sale.

About This Book

பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா, அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சாரப் பாசாங்கையும் போலி ஒழுக்கச் சார்பையும் அம்பலப்படுத்தினார். ‘எனது ஆண்கள்’ நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப் பகிரங்கப்படுத்துகிறது. பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார். இது நளினி ஜமீலாவின் வாக்குமூலம் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்டமாக விவாதிக்கும் தார்மீக அறிக்கையும் ஆகும். Sex worker Nalini Jamila shocked the Kerala cultural world with her biography. She exposed the cultural

Details
Author
நளினி ஜமீலா, மொழிபெயர்ப்பாளர்-ப. விமலா
Publisher
Kalachuvadu Publications
Release date
21 Aug, 2025
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
5.5 in - 8.5 in
Pages
160 Pages
About The Author

நளினி ஜமீலா திருச்சூரின் பக்கத்திலுள்ள கல்லூரில் பிறந்தார். தந்தை: நெல்லிப்பரம்பில் ராகவன், தாய்: பணிக்கப்பரம்பில் கல்யாணி. கூலித்தொழிலாளியாகயிருந்து இருபத்து நான்காம் வயதில் பாலியல் தொழிலுக்கு வந்தார். கேரளா ‘செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ அமைப்பில் செயல்பட்டு வருகிறார். ‘ஜுவாலாமுகிகள்’, ‘A Peep into the Silenced’ என்ற இரண்டு ஆவணப்படங்கள் தயாரித்திருக்கிறார். மூத்த மகள் லதாவுக்கு இரண்டு குழந்தைகள். இரண்டாவது மகள்: ஸீனத், கணவர்: சுதீர் ப. விமலா கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளமுனைவர், முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார். ‘தொல்காப்பிய மலையாள மொழிபெயர்ப்புகள்’ என்னும் தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வினை ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 2019இல் நிறைவு செய்துள்ளார். ‘மலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்’ என்னும் நூலும் ‘விவேகானந்தம்’ என்னும் புதின மொழிபெயர்ப்பு நூலும் இவரின் குறிப்பிடத்தக்க நூல்கள். தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை (தேனி) இவரது இலக்கியப் பணிக்காக ஜி. நாகராஜன் நினைவு இலக்கியச் சிற்பி விருதினை (2020) வழங்கிச் சிறப்பித்துள்ளது. தற்போது சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website