• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
காலச்சுவடு இதழ் 302 (2025, பிப்ரவரி)

காலச்சுவடு இதழ் 302 (2025, பிப்ரவரி)

Kalachuvadu Publications
  • List Price

    $10.00

  • Publish Date

    13 Nov, 2025

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    A4 (8.27 in - 11.69 in)

  • Pages

    80 Pages

About This Book

மாற்றத்திற்கு முகம் கொடுக்கும் அடையாளம்: டி.எம். கிருஷ்ணா சங்கீத கலாநிதி விருது பெற்றதையொட்டிய சர்ச்சைகளின் பின்புலத்தில் கிருஷ்ணாவின் மியூசிக் அகாடமி கச்சேரியும் கருத்தரங்குகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. கச்சேரியிலும் கருத்தரங்குகளிலும் அப்படி என்ன நடந்தது, அதிலிருந்து பெறக்கூடிய செய்திகள் என்ன என்பவற்றைத் தலையங்கம் அலசுகிறது. அதீத எதிர்வினைகளின் ஆபத்து: அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதையடுத்து நடைபெற்ற விவாதங்களிலும் சட்ட ரீதியான முன்னெடுப்புகளிலும் உள்ள பிரச்சினைகளை அலசுகிறது இரண்டாவது தலையங்கம். ஆவாராவும் சோஷலிசமும்: ராஜ் கபூரின் ஆவாரா திரைப்படம் சீனாவில் பெற்ற வரவேற்பை நினைவுகூரும் கட்டுரை அது தொடர்பான பல சுவாரஸ்யமான சங்கதிகளை முன்வைக்கிறது. ராஜ் கபூரின் நூற்றாண்டையொட்டி வெளியாகும் கட்டுரை இது. காலச்சுவடு 300: பாரதியியலுக்குக் காலச்சுவடு ஆற்றிவரும் அரிய பங்களிப்பு குறித்த விரிவான சித்திரத்தைத் தருகிறார் ஜெ. சுடர்விழி. அம்பலம்: முனைவர் பட்ட ஆய்வுகளில் நடக்கும் மோசடிகளைக் கார்த்திக் ராமச்சந்திரன் கவனப்படுத்துகிறார். பதிவுகள்: வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா, பெருமாள்முருகன் படைப்புகள் குறித்த கருத்தரங்கம், சென்னைப் புத்தகக் காட்சியில் காலச்சுவடு அரங்கில் நடந்த நிகழ்வுகள் ஆடுகளம்: சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆட்ட வாழ்வின் ஆச்சரியங்களையும் புதிர்களையும் அலசுகிறார் தினேஷ் அகிரா. கதைகள்: குமாரநந்தன், மாஜிதா கவிதைகள்: டோனி பிரஸ்லர் அஞ்சலி: எம்.டி. வாசுதேவன் நாயர், ஷ்யாம் பெனகல், மன்மோகன் சிங்

About The Author

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
காலச்சுவடு இதழ் 302 (2025, பிப்ரவரி)
காலச்சுவடு உலகத் தமிழ் இதழ்
காலச்சுவடு இதழ் 302 (2025, பிப்ரவரி)
காலச்சுவடு உலகத் தமிழ் இதழ்
© 2025 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website