• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
காலச்சுவடு இதழ் 301 (2025 ஜனவரி)

காலச்சுவடு இதழ் 301 (2025 ஜனவரி)

Kalachuvadu Publications
  • List Price

    $14.00

  • Publish Date

    13 Nov, 2025

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    A4 (8.27 in - 11.69 in)

  • Pages

    142 Pages

About This Book

தலையங்கம்: ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் முடிவை முன்வைத்து அலசும் தலையங்கம். சிறப்புப் பகுதி 36+: காலச்சுவடு 300 இதழ் நிறைவடைந்து 36ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதழின் பண்பாட்டுத் துறைகள் சார்ந்த பங்களிப்பு குறித்த பதிவுகள். • மொழி வளர்ச்சியும் காலச்சுவடும் (சு. இராசாராம்) • காலத்தில் மறையாத காந்தியின் சுவடுகள் (சுனில் கிருஷ்ணன்) • கதவைத் திறந்து வைத்த காலச்சுவடு (ஜெ. பாலசுப்பிரமணியம்) • காலச்சுவடும் சூழலியலும் (சித்ரா பாலசுப்பிரமணியன்). நேர்காணல்கள்: செந்தீ நடராசன்: ‘கற்களுடன் மோதிக் கல்வெட்டைக் கற்றேன்’ சந்திப்பு: அரவிந்தன் கல்வெட்டுகளை ஆராய்வது, கல்வெட்டுகளைப் படிப்பது எப்படி என்று பயிற்சி தருவது, வானியல், சோதிடம் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் கல்வெட்டு ஆய்வாளர் செந்தீ நடராசனின் நேர்காணல். அமோஸ் கோல்ட்பெர்கின்: ‘ஆம், இது இன அழித்தொழிப்புதான்’ தமிழில்: க. திருநாவுக்கரசு காஸா, இஸ்ரேல் போரைக் கடுமையாக விமரிச்சித்துவரும் இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் அமோஸ் கோல்ட்பெர்கின் நேர்காணலின் மொழிபெயர்ப்பு. கட்டுரைகள்: • பழைய கதைகள்: சமகால முக்கியத்துவங்கள் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா • கேரளத் தோல்பாவைக் கூத்தில் தமிழ்ப் பனுவல்கள் - அ.கா. பெருமாள் புத்தகப் பகுதி: • ஜியாவுதீன் ஸர்தார் எழுதிய ‘நபிகள் நாயகம் சில முக்கியக் குறிப்புகள்’ கட்டுரைகளிலிருந்து ஒரு பகுதி. • மு. குலசேகரன் எழுதிய ‘தங்க நகைப் பாதை’ நாவலிலிருந்து ஒரு பகுதி, • வி. சுதர்ஷன் எழுதிய ‘குற்றமும் அநீதியும்’ அனுபவக் கட்டுரை நூலிருந்து ஒரு பகுதி. மதிப்புரைகள்: • ‘நிச்சலனத்தின் நிகழ்வெளி’ (கட்டுரைகள்) தியடோர் பாஸ்கரன் • ‘கற்றதால்’ (நாவல்) சுப்பிரமணி இரமேஷ். பதிவுகள்: • பெங்களூர் கவிதைத் திருவிழா • அம்பை - 80 சிறுகதைகள்: • தற்கொலை மகாத்மியம் - யுவன் சந்திரசேகர் • சங்கு - சுஜாதா செல்வராஜ் • கடல் பின்வாங்கிய காலத்தில் - வஜ்ர சந்திரசேகர (தமிழில்-எழுத்துக்கினியன்) கவிதைகள்: • சுகுமாரன் • சல்மா • இலட்சுமண பிரகாசம் அஞ்சலி: • ஜாகிர் ஹுசைன் (சுகுமாரன்) • ஜெயபாரதி (தியடோர் பாஸ்கரன்)

About The Author

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
காலச்சுவடு இதழ் 301 (2025 ஜனவரி)
காலச்சுவடு உலகத் தமிழ் இதழ்
காலச்சுவடு இதழ் 301 (2025 ஜனவரி)
காலச்சுவடு உலகத் தமிழ் இதழ்
© 2025 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website