• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
காலச்சுவடு இதழ் 309 (செப்டம்பர் 2025)

காலச்சுவடு இதழ் 309 (செப்டம்பர் 2025)

Kalachuvadu Publications
  • List Price

    $10.00

  • Publish Date

    15 Nov, 2025

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    A4 (8.27 in - 11.69 in)

  • Pages

    80 Pages

About This Book

காலச்சுவடு இதழ் 309 (செப்டம்பர் 2025) தலையங்கம்: அயலாரையும் அரவணைக்கும் அரசியல் புலம்பெயர்ந்தோருக்கு வாக்குரிமையை ஆரோக்கியமான ஜனநாயகச் செயல்முறையாகக் கருத வேண்டிய அவசியம் குறித்துத் தலையங்கம் பேசுகிறது. கண்ணோட்டம்: கறைபடிந்த விருதுகள் – செந்தூரன் 71ஆவது தேசிய விருதுகளில் உள்ள அழகியல், அரசியல் பிரச்சினைகளை அலசும் கண்ணோட்டம். சிறப்புப் பகுதி: 5 நாவல்கள், 5 பார்வைகள் கடந்த ஆண்டு வெளியான ஐந்து நாவல்களைப் பற்றிய விரிவான அலசல்கள். • மானசீகன் எழுதிய ‘மூன்றாம் பிறை’ பற்றி விக்னேஷ் ஹரிஹரன் • மு. குலசேகரன் எழுதிய ‘தங்க நகைப் பாதை’ பற்றி க.வை. பழனிசாமி • வேல்முருகன் இளங்கோ எழுதிய ‘இரவாடிய திருமேனி’ பற்றி சுனில் கிருஷ்ணன் • ஸர்மிளா ஸெய்யித் எழுதிய ‘சிவப்புச் சட்டை சிறுமி’ பற்றி ஜா. தீபா • குணா கந்தசாமியின் ‘டாங்கோ’ பற்றி சிவபிரசாத் கட்டுரைகள்: டிரம்ப் ராஜ்ஜியத்தில் பாரதமாக இருப்பது - மு. இராமனாதன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு விதித்துள்ள 50 சதவீதம் இறக்குமதித் தீர்வையின் சாதகபாதகங்களையும் அரசியலையும் மு. இராமனாதன் விரிவாக ஆராய்கிறார். சாதி வன்முறையில் இளைய தலைமுறையினர் - ஸ்டாலின் ராஜாங்கம் சிவகங்கை கண்டதேவி தேரோட்டம் குறித்து மதுரை உயர்நீதிமனறக் கிளை எழுப்பிய கேள்வியை முன்வைத்து, இன்றைய தமிழகத்தில் நிலவும் சாதியப் போக்குகளைப் புதிய கோணங்களில் விவாதிக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். ஆணவக் கொலைகளின் உண்மை விலை - ஏ.பி. இராஜசேகரன் சாதி ஆணவக் கொலைகள் உயிரை எடுப்பதற்காக மட்டுமல்ல; ஒரு சமூகம் முழுவதற்கும் பொருளாதார இழப்பினை ஏற்படுத்தவும் நிகழ்த்தப்படுகின்றன என்கிறார் ஏ.பி. இராஜசேகரன். பதிவுகள்: • சுகுமாரன் படைப்புப் பயணம் பற்றிய ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் • சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆ.இரா. வேங்கடாசலபதிக்கான பாராட்டு விழா • பெங்களூரில் நடந்த புக் பிரம்மா இலக்கிய விழா அஞ்சலி: வே. வசந்திதேவி - ச. தமிழ்ச்செல்வன் பாரதியியல்: பாரதியின் முகவுரை பெற்ற இரு பாரத புத்திரிகள் - ய. மணிகண்டன் சிறுகதை: சந்தைக்கடை - பெருமாள்முருகன் கவிதைகள்: ஜெபா, சோ. விஜயகுமார், மண்குதிரை

About The Author

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
காலச்சுவடு இதழ் 309 (செப்டம்பர் 2025)
காலச்சுவடு உலகத் தமிழ் இதழ்
காலச்சுவடு இதழ் 309 (செப்டம்பர் 2025)
காலச்சுவடு உலகத் தமிழ் இதழ்
© 2025 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website