• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
காலச்சுவடு 310 ( 2025 அக்டோபர் )

காலச்சுவடு 310 ( 2025 அக்டோபர் )

Kalachuvadu Publications
  • List Price

    $10.00

  • Publish Date

    15 Nov, 2025

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    A4 (8.27 in - 11.69 in)

  • Pages

    80 Pages

About This Book

தலையங்கம்: அடிப்படைவாதத்துக்கு உரம்சேர்க்கும் மௌனம் மேற்கு வங்காள உருது அகாடமி நடத்தவிருந்த ‘இந்தி சினிமாவில் உருது’ கருத்தரங்கம் “தவிர்க்க முடியாத” காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டதற்குப் பின்னிருக்கும் மதவாத அரசியல் குறித்துத் தலையங்கம் ஆராய்கிறது. பிணை மறுப்பு: நீதியின் வன்முறை குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய உமர் காலித் உள்ளிட்ட ஒன்பது பேரின் பிணை மனுக்களை நீதிமன்றம் நிராகரித்திருக்கும் சூழலில் எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்கள்மீது தொடரும் நடவடிக்கைகளைப் பற்றித் தலையங்கம் பேசுகிறது. கட்டுரைகள்: தெரு நாய்களும் கடல் ஆமைகளும் - மு. இராமநாதன் இந்தியக் கடற்கரைகளில் கடல் ஆமைகளின் இனவிருத்திக்குத் தெரு நாய்களால் உருவாகும் ஆபத்துகளை மு.இராமநாதன் குறிப்பிடுகிறார். விலங்குப் பண்ணை: 80 ஆண்டுகள். விலங்குகள் சொல்லும் அரசியல் பாடம் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா விலங்குப் பண்ணை நாவல் வெளியான 80 ஆண்டுகளுக்குப் பிறகு சச்சிதானந்தன் சுகிர்தராஜா தனக்கேயுரிய பார்வையுடன் இந்த நாவலை அலசி ஆராய்கிறார். சிறப்புப் பகுதி: சு.ரா. நினைவு இருபதாம் ஆண்டு • வான்கோ: ஒப்பற்ற கலைஞனின் உண்மையான வாழ்க்கை -அறிமுகமும் மொழிபெயர்ப்பும்: சுந்தர ராமசாமி. • ‘அன்புள்ள வசந்தகுமார்’- சு.ரா. கடிதங்கள் • கட்டுரை: சூத்திரங்கள் மாறலாம் விழுமியங்கள் மாறாது - ப. சகதேவன் நாவல் சிறப்புப் பகுதி: என். ஸ்ரீராமின் இரவோடி நாவல்பற்றி சுப்பிரமணி இரமேஷ் பாரதியியல்: முத்துலெட்சுமியை எழுதச்சொன்ன பாரதி - ய. மணிகண்டன். திரை: மௌனத்தின் மறுபக்கம் - தூயன் அஞ்சலி: • பி.வி. கரியமால் - ஸ்டாலின் ராஜாங்கம் • ஆர்.எஸ். நாராயணன் - தி.அ. ஸ்ரீனிவாஸன். மதிப்புரைகள்: • தற்புகழ்ச்சியற்ற எழுத்து - களந்தை பீர்முகம்மது • உயிரின் வாதை - நாகரத்தினம் கிருஷ்ணா. பதிவுகள்: • அமெரிக்கன் கல்லூரியில் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல் வெளியிட்டு விழா. • சங்கீத கலாநிதி விருது பெற்ற டி.எம். கிருஷ்ணாவுக்கும், சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஆ. இரா. வேங்கடாசலபதிக்கும் நாமக்கலில் நடந்த பாராட்டு விழா. • மதுரை அருள் ஆனந்தர் கல்லூரியும் சாகித்திய அகாதெமியும் இணைந்து நடத்திய ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டு விழா. சிறுகதை: • நனவிலி பிம்பங்கள் - ச. மோகனப்ரியா • நீலகேசி - கலைச்செல்வி கவிதைகள்: பெருமாள்முருகன் https://kalachuvadu.com/magazines

About The Author

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
காலச்சுவடு 310 ( 2025 அக்டோபர் )
காலச்சுவடு உலகத் தமிழ் இதழ்
காலச்சுவடு 310 ( 2025 அக்டோபர் )
காலச்சுவடு உலகத் தமிழ் இதழ்
© 2025 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website