Price
$10.00

தலையங்கம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் எதிர்காலம் ஒவ்வொரு மாநிலத்திற்கான மக்களவைத் தொகுதிகளை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யும் நடைமுறை 2027இன் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு நடக்கவிருக்கிறது. இது தென் மாநிலங்களின் அரசியல் வலிமையைப் பெரிதும் குறைத்துவிடக்கூடும் என்கிற அச்சம் நிலவுகிறது. இந்தப் பிரச்சினையின் பரிமாணங்களை அலசும் தலையங்கம் சாத்தியமான தீர்வுகளையும் முன்வைக்கிறது. மௌனத்தின் அபாயம் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு நடந்து 35 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த இனச்சுத்திகரிப்பு குறித்துத் தமிழகத்தில் நிலவிவரும் மௌனம் பற்றிப் பேசுகிறது துணைத்தலையங்கம். கட்டுரைகள்: ஆர்எஸ்எஸ்ஸும் காரல் மார்க்ஸும் — ஜே.ஆர்.வி. எட்வர்ட் 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு மூன்று முறை இந்திய அரசால் தடைவிதிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகள் குறித்துப் புதிய கண்ணோட்டத்தோடு விவாதிக்கும் கட்டுரை. இலங்கையரா? இந்தியரா? — ந. சரவணன் தமிழகத்தில் முகாம்களில் வாழும் இந்தியத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினை குறித்த கட்டுரை. இதுவா ஊடக அறம்? —கீதா நாராயணன் சினிமா நடிகை கெளரி கிஷனிடம் ஊடகவியலாளர் தகாத கேள்வியை எழுப்பியது தொடர்பான சர்ச்சையைப் பற்றிய கட்டுரை. பிறழ் தகவல்களின் காலம் — தோ. டால்டன் சமூக வலைதளங்களில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் பரப்பப்பட்டுவரும் செய்திகளின் பின்னணியையும் கரூர் துயரச் சம்பவம், சிவகங்கை அஜித்குமார் படுகொலை, சென்னை பருவமழைக் காலங்களில் பொய்யாகப் பரப்பபட்டுவந்த செய்திகளின் அரசியலையும் நுட்பமாகச் சித்தரிக்கிறது இக்கட்டுரை. சுந்தர ராமசாமி (எனக்கு) எழுதிய இரண்டு கடிதங்கள்—சுகுமாரன் எழுத்தாளர் சுகுமாரனுக்கு சு.ரா. எழுதிய கடிதங்கள் தொடர்பான சுவாரஸ்யமான அனுபவங்களின் பதிவு. டிரம்பின் கறுப்பின அடையாள நீக்கம் — ஞா. குருசாமி அமெரிக்கா, கறுப்பின வரலாறு தொடர்பான அடையாளச் சின்னங்களை நீக்குவது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்ட உத்தரவிற்குப் பிறகு உண்மையான வரலாற்றின் அடையாளத்தை விசாரணைக்குட்படுத்தும் கட்டுரை. சிறுகதைகள்: தீவிளி — சவீதா கருநாகங்கள் — பானு முஷ்தாக் (தமிழில்: ப. சகதேவன்) கவிதைகள்: கனகா பாலன், ச. அர்ஜுன்ராச், பெரு விஷ்ணுகுமார், தேன்மொழி அசோக். பதிவு: காலச்சுவடு-30, சேரன்-50. மதிப்புரைகள்: பாதுகாப்பின்மையின் பதற்றம் — மண்குதிரை தமிழ் அறிவுப் பாரம்பரியத்தின் திறவுகோல் — அ. மோகனா நீர்ப்பரணி நாவல் - களந்தை பீர்முகம்மது.