• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
காலச்சுவடு இதழ் 313 (2026 ஜனவரி)

காலச்சுவடு இதழ் 313 (2026 ஜனவரி)

Kalachuvadu Publications
  • Price

    $14.00

  • Buy Direct Support the writer - cut out the middleman.

  • Eco-Friendly Sustainable publishing, one book at a time.

  • Publish Date

    4 Mar, 2026

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    A4 (8.27 in - 11.69 in)

  • Pages

    142 Pages

About This Book

தலையங்கம்: குழந்தைகள் மீதான டிஜிட்டல் பாலியல் அத்துமீறல்களைக் குறைபாடுகளின் பெயரால் நியாயப்படுத்துவதைத் தலையங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ‘செக்ஸ் குரூமிங்’ அபாயங்கள், போக்சோ சட்டத்தின் முக்கியத்துவம், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது தலையங்கம். சிறப்புப் பகுதி: கல்வியில் சிறக்கிறதா தமிழ்நாடு? தமிழகத்தின் கல்வி நிலை, குறிப்பாக பள்ளிக்கல்வியின் நிலையையும் அதை மேம்படுத்தும் வழிகளையும் பல்வேறு கோணங்களில் துரை சார்ந்த நிபுணர்களும் சிந்தனையாளர்களும் அலசுகிறார்கள். பிற நாடுகளுடனான ஒப்பீடுகளும் இடம்பெறுகின்றன. கட்டுரைகள்: இஸ்லாத்தில் சாதி - களந்தை பீர்முகம்மது தென்மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களில் சாதிய பேதமில்லாமல் திருமண உறவுகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் காதல் உணர்வுகள் மதிக்கப்படுவது குறித்தும் எழுதப்பட்ட அனுபவக் கட்டுரை. சாதியச் சொல்லாடல்களின் சமகால மாற்றங்கள் - ஸ்டாலின் ராஜாங்கம் தமிழகத்தில் சாதிய அமைப்புகளும் சாதியப் பெருமிதங்களும் பெருகிவரும் சூழலில் எல்லாச் சாதிகளையும் திருப்பதிப்படுத்தும் இணக்க அரசியலை எவ்வாறு அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன என்பதை அலசுகிறது கட்டுரை. கேரளம்: தன்வயப்படும் மதங்களும் அரசியலும் - எச். பீர் முஹம்மது கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலிலும் இஸ்லாமிய இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த பதிவு. அம்மாக்களும் மகள்களும் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய், சீன எழுத்தாளர் யுங் சாங் இருவருடைய தன்வரலாற்று நூல்கள் குறித்த கட்டுரை. மதிப்புரை: ஷகி பெய்ன் (நாவல்) - ஷாலினி பிரியதர்ஷினி பதிவு: கடந்த டிசம்பர் 21ஆம் தேதி சென்னை கவிக்கோ மன்றத்தில் சங்கீத காலநிதி சஞ்சய் சுப்ரமணியனின் இசைபட வாழ்தல், தி. ஜானகிராமனின் இசைசார் சிறுகதைகள் அடங்கிய ரசிகரும் ரசிகையும் ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி. உரை: ஓஸ்லோவில் 19.10.2025 அன்று காலச்சுவடு 30—சேரன் 50 நிகழ்வில் கண்ணன் ஆற்றிய உரை. பாரதியியல்: பாரதியும் சுதேசி கிருஷ்ணனும் (அருண் பிரகாஷ்) சிறுகதைகள்: குறளி - யுவன் சந்திரசேகர் தொலைகின்ற இடம் – கோகுலக்கண்ணன் மழை நிற்கப் போவதில்லை - பெருந்தேவி கதைகள் - தூயன் கவிதைகள்: சுகுமாரன் அ. ஈஸ்டர் ராஜ்

About The Author

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
காலச்சுவடு இதழ் 313 (2026 ஜனவரி)
Kalachuvadu Publications
காலச்சுவடு இதழ் 313 (2026 ஜனவரி)
Kalachuvadu Publications
© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website