• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
இசை கவிதைகள்

இசை கவிதைகள்

Kalachuvadu Publications
  • Price

    $32.00

  • Buy Direct Support the writer - cut out the middleman.

  • Eco-Friendly Sustainable publishing, one book at a time.

  • Publish Date

    5 Mar, 2026

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    Digest (5.5 in - 8.5 in)

  • Pages

    648 Pages

About This Book

பகடி, எளிமை இரண்டும் இசை கவிதைகளின் பொதுவான அடையாளங்களாகச் சொல்லப்படுபவை. பகடி அவரது பல கவிதைகளில் வாசகர்களுடன் தொடர்புறுத்தச் செயல்படும் ஓர் உத்தி மட்டுமே. எளிமையும் சமயத்தில் ஒரு தோற்ற மயக்கம்தான். சட்டெனத் திறக்க ஓரடி தொலைவில் வாட்டமாகத் தோன்றும் ஒரு சிறிய கதவு. திறந்தாலோ, கண்ணுக்கு அகப்படும் காட்சி, அது சற்றுக் கோணலாகி இன்னொரு காட்சி, சில சமயம் புலப்படாது புலப்படும் பின்னொரு காட்சி என விரிந்து செல்கின்றன. இசையின் கவிதைகளில் பொதுவாகவே தருணங்கள் அபார சக்தி படைத்தவையாக இருக்கின்றன. கவிதைக்குள் அப்போது நிகழ்பவையாகவும் ஆழ்ந்து அனுபவிக்கப்படுபவையாகவும் கொண்டாடப்படுபவையாகவும் நீண்டு வளர்பவையாகவும் இருக்கின்றன. பொருந்தாதவற்றைப் பொருத்திவைக்கின்றன. மட்டுமின்றி, ஒருவர் இன்னொருவராக மாறிவிடும் ஆசியையும் சாத்தியப்படுத்திவிடுகின்றன. சில கவிதைகள் மொத்த வாழ்க்கையையுமே ஒரு நுண்தருணத்தின் ஊசிமுனையில் சீராக நிறுத்துகின்றன.

About The Author

இசை (பி. 1977) இயற்பெயர் ஆ. சத்தியமூர்த்தி. பொது சுகாதாரத் துறையில் பணி. கோவை மாவட்டம் இருகூரில் வசித்து வருகிறார். ‘காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி’ (2002), ‘உறுமீன்களற்ற நதி’ (2008), ‘சிவாஜி கணேசனின் முத்தங்கள்’ (2011), ‘அந்தக் காலம் மலையேறிப்போனது’ (2014) ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ‘அதனினும் இனிது அறிவினர் சேர்தல்’ (2013) கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
இசை கவிதைகள்
இசை
இசை கவிதைகள்
இசை
© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website