• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
Paperback

பொம்பளைங்க பஞ்சாயத்து - பாலினச் சமத்துவத்திலிருந்து பாலின நீதியை நோக்கி

By ஷாலின் மரிய லாரான்ஸ்

பொம்பளைங்க பஞ்சாயத்து - பாலினச் சமத்துவத்திலிருந்து பாலின நீதியை நோக்கி
Price$12.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ of every sale.

About This Book

கடைசியில் எல்லாம் பெண்களின் கேள்விகளில் வந்துநிற்கின்றன. ஏன், எதற்கு என்று அவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக எழாத கேள்விகள் எழுகின்றன; ஒலிக்காத எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கின்றன. சாதி, வர்க்கம், மதம், சமூக அந்தஸ்து ஆகிய எல்லை களைத் தாண்டி எல்லா மட்டங்களி லிருந்தும் பெண்களின் உரிமைக் குரல் ஒலிக்கிறது. இவற்றுக்குப் பதில் சொல்ல முடியாத ஆணாதிக்கச் சமூகம், “அட போம்மா. . . எப்போ பாத்தாலும் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு” என்று சொல்லி அலட்சியப்படுத்தப் பார்க்கிறது. ஆம், பெண்கள் பஞ்சாயத்துக் கூட்டுகிறார்கள். ஆணாதிக்கச் சமூகம் பாராமுகமாக இருந்தாலும் விடாமல் மல்லுக்கு நிற்கிறார்கள். இந்தப் ‘பஞ்சாயத்து’ காட்சிகளுக்கு மொழி வடிவம் தருகிறார் ஷாலின் மரிய லாரன்ஸ். பெண்களின் குரலை, நீதிக்கான வேட்கையை, வெறும் அறிவுத் தளத்தில் பிரதிபலிக்காமல் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலைப் பெண்களின் நிலையிலிருந்து பிரதிபலிப்பது இவரது தனித்துவம். ‘சண்டைக்காரிகள்’ தொகுப்பில் வெளிப்பட்ட இந்தப் போர்க்குரல் இந்தத் தொகுப்பில் மேலும் விரிவான தளங்களிலிருந்து பெண்களின் அன்றாடப் பிரச்சினைகளை அலசித் தீர்வுகாண்பதற்கான சமரைத் தொடுக்கிறது.

Details
Author
ஷாலின் மரிய லாரான்ஸ்
Publisher
Kalachuvadu Publications
Release date
19 Mar, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
5.5 in - 8.5 in
Pages
176 Pages
About The Author

ஷாலின் மரிய லாரன்ஸ் (பி. 1983) எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். சொந்த ஊர் சென்னை. கற்றது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி; தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினார். தற்போது குமுதம் வார இதழில் ‘மனதைப் புண்படுத்தும் பக்கங்கள்’ என்கிற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதிவருகிறார். ஆங்கில, தமிழ் நாளிதழ்களிலும் மின்னிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் அரசியல், பெண்ணியம், சமூகம், தலித்தியம், சினிமா, கலை ஆகியவை குறித்து எழுதியும் பேசியும் வருகிறார். வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழகப் பெண்களுக்குப் பெண்ணியம், தலைமைப் பண்புகள் குறித்த பயிற்சிகளையும் கடந்த ஐந்து வருடங்களாக அளித்துவருகிறார். ‘வடசென்னைக்காரி’ (2019), ‘ஜென்சி ஏன் குறைவாகப் பாடினார்?’ (2019) ஆகிய இரு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. இது இவரது மூன்றாவது கட்டுரைத் தொகுப்பு. முகவரி : 144/93 பிபி சாலை, பெரம்பூர், சென்னை-600039 கைப்பேசி : 97910 12329

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website